Prayer of the Day தினமும் துதிப்போம்
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோயில்)
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியொடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமி வான்படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானைக் கேதாரம் மேவினானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே..
No comments:
Post a Comment